கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரி வந்த பெண்களால் பரபரப்பு..!!

Read Time:1 Minute, 32 Second

2a244469-32d1-4b77-921e-e812cd81fe40_S_secvpfமதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி வேலுத்தாய் (வயது60). இவர் வீட்டு தொட்டியின் மூடியை எடுத்தபோது அதில் மறைந்திருந்த கட்டுவிரியான் பாம்பு கடித்து விட்டது. வேலுத் தாயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பாம்பை அடித்து கொன்றனர்.

பின்னர் கடித்த பாம்புடன் வேலுத்தாய் வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி அழைத்து வரப்பட்டார்.

மதுரை பெருங்குடி அருகே உள்ள பரம்பு பட்டியை சேர்ந்தவர் அம்மாசி (55). இவர் அங்குள்ள குப்பைகளை அள்ளிய போது அதில் மறைந்திருந்த பாம்பு கடித்துவிட்டது. அவரை கடித்த பாம்பை உறவினர்கள் அடித்து கொன்றனர்.

பின்னர் அந்த பாம்புடன் அம்மாசி திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். 2 பாம்புகளுடன் பெண்கள் வந்ததால் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டது..!!
Next post மதுரையில் காவலர் குடியிருப்பில் தீக்குளித்து பெண் தற்கொலை…!!