அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய வாலிபர் உள்பட 3 பேர் பலி…!!
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர் ரவி நாயக் (வயது 23). இந்திய வாலிபரான இவர் மன்காட்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 28-ந்தேதி நியூஜெர்சி நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்றிருந்தது. வேகமாக சென்ற ரவி நாயக்கின் கார், அந்த லாரியில் மோதியது. இதில் காயமின்றி தப்பிய அவரை லாரி டிரைவர், காருக்குள் இருந்து வெளியே மீட்டார்.
பின்னர் இருவரும் தங்கள் வாகனங்களுக்கு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதில் அந்த லாரியும், காரும் சேர்ந்து ரவி நாயக் மீது பலமாக மோதின. இந்த கோர சம்பவத்தில் ரவி நாயக் படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு மோரிஸ்டவுனில் உள்ள ஒரு மருத்துவ மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி நாயக் உயிரிழந்தார். இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating