பாரீஸ் தாக்குதல்: பெல்ஜியம் தீவிரவாதி சிரியாவுக்கு தப்பி ஓட்டம்..!!

Read Time:1 Minute, 18 Second

f628e481-b1a9-4d2c-b3c0-7b3a847496a2_S_secvpfபிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல் ஹமீது சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில் கொல்லப்பட்டான். மேலும் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர பெல்ஜியத்தைச் சேர்ந்த சலா அப்தெஸ்லாம் (30) என்பவனும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே, அவனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அவன் சிரியாவுக்கு தப்பி ஓடிவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு பெல்ஜியம் எல்லையில் இவன் 3 முறை பயணம் செய்த போது போலீசாரிடம் சிக்கினான். அப்போது அவன் மீது போலீசாரின் சந்தேக பார்வை இல்லை. எனவே அவன் தப்பிவிட்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடி அரசு என்னுடன் நேருக்குநேர் மோதட்டும்: வருமான வரித்துறை சோதனை பற்றி ப.சிதம்பரம் கருத்து…!!
Next post அமெரிக்கா: புகை பிடிப்பதை தடுத்த பார் பணிப்பெண்ணை சுட்டுக் கொன்ற குடிமகன்…!!