பிள்ளையானுக்கு விளக்கமறியல்…!!

Read Time:1 Minute, 28 Second

downloadமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 16ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் இதன்போது உத்தரவிட்டார்.

இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

பிள்ளையான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதையொட்டி மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு தவிர்ந்த அனைத்து பாடசாலைகளுக்கும் 4ம் திகதி பூட்டு…!!
Next post தொலைபேசிக் கம்பத்தில் ஏறி போராட்டம்..!!