தொலைபேசிக் கம்பத்தில் ஏறி போராட்டம்..!!
Read Time:59 Second
ராஜாங்கனை – புத்தளம் சந்தி பகுதியில் தொலைபேசிக் கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அவர் இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் தனது எனக் கூறும் வயல் காணி ஒன்றை பிரிதொருவருக்கு வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே அவர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளரிடம் அறிவித்தும் நியாயம் கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவரின் மனைவி கூறியுள்ளார்.
Average Rating