அந்தியூர் அருகே விபத்து: ஜீப் மோதி வன அலுவலர் பலி…!!
அந்தியூர் அருகே அண்ணா மடுவு பகுதியை சேர்ந்தவர் கோபாலன் (வயது 69). இவர் ஓய்வுபெற்ற வன அலுவலர்.
கோபாலன் இன்று காலை 8 மணியளவில் தனது பேத்தியை பள்ளிக்கு அழைத்து செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.
அப்போது வீட்டு அருகே கோபாலன் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத ஜீப் , அவர் மீது மோதியது. பேத்தி சற்றுதூரம் தள்ளி நின்றதால் அவர் தப்பினார்.
இந்த விபத்தில் கோபாலன் கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபாலன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத ஜீப்பையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
பேத்தியை பள்ளித்து அழைத்து செல்ல ஓய்வுபெற்ற வன அலுவலர் ஜீப் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பலியான கோபாலனுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
Average Rating