திருச்சியில் பிரபாகரன் கொடும்பாவியை எரித்த காங்கிரஸார்
Read Time:1 Minute, 16 Second
திருச்சியில், மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. முன்னதாக மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தமிழகக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு காங்கிரஸார் கோரிக்கை விடுத்தனர்.