3 பேர் மீது மோதியபின் சேதமடைந்த காரிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டிருந்த சாரதி…!!

Read Time:1 Minute, 52 Second

13600car23 பேர் மீது காரினால் மோதி, ஒருவர் கொல்­லப்­ப­டு­வ­தற்கு கார­ண­மான லம்­போர்­கினி கார் சாரதி ஒருவர், அவ்­வி­பத்தின் பின்னர், ஜன்­ன­லுக் ­கூ­டாக தலையை நீட்டி எஸ்.எம்.எஸ். அனுப்­பிக்­கொண்­டி­ருந்­ததை சிலர் வீடி­யோவில் பதி­வு­செய்­துள்­ளனர்.

இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவா பிராந்­தி­யத்­தி­லுள்ள சுர­பாயா நகரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி லம்­போர்­கினி காரின் சார­தி­யான 24 வய­தான வியாங் லோட்னர் எனும் இளைஞர் பெராரி ரக ஆடம்­பர காரொன்­றுடன் பந்­த­யத்தில் ஈடு­பட்டு அதி­வே­க­மாக காரை செலுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது அவரின் கார் கட்­டுப்­பாட்டை இழந்து 3 பேரில் மோதி­யபின் மர­மொன்றின் மீது மோதி நின்­றது.

இச்­சம்­ப­வத்தில் 51 வய­தான நபர் ஒருவர் உயி­ரி­ழந்தார். அவரின் மனை­வி­யான 41 வயது பெண்ணும் 44 வய­தான வியா­பாரி ஒரு­வரும் படு­கா­ய­ம­டைந்­தனர். இவ்­வி­பத்­தின்பின் அங்கு பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

எனினும், இக்­காரின் சார­தி­யான வியாங் லோட்னர், சேத­ம­டைந்த அக்­காரின் ஜன்­ன­லுக்கு ஊடாக தலையை நீட்­டி­ய­வாறு தனது செல்­லிடத் தொலைபேசி மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தார்.

பின்னர் லோட்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியா லேக் சாத் தீவில் தற்கொலைத் தாக்குதல்: 27 பேர் பலி…!!
Next post மதுபோதையில் கப்பலை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய மாலுமி…!!