3 பேர் மீது மோதியபின் சேதமடைந்த காரிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டிருந்த சாரதி…!!
3 பேர் மீது காரினால் மோதி, ஒருவர் கொல்லப்படுவதற்கு காரணமான லம்போர்கினி கார் சாரதி ஒருவர், அவ்விபத்தின் பின்னர், ஜன்னலுக் கூடாக தலையை நீட்டி எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டிருந்ததை சிலர் வீடியோவில் பதிவுசெய்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா பிராந்தியத்திலுள்ள சுரபாயா நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி லம்போர்கினி காரின் சாரதியான 24 வயதான வியாங் லோட்னர் எனும் இளைஞர் பெராரி ரக ஆடம்பர காரொன்றுடன் பந்தயத்தில் ஈடுபட்டு அதிவேகமாக காரை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேரில் மோதியபின் மரமொன்றின் மீது மோதி நின்றது.
இச்சம்பவத்தில் 51 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் மனைவியான 41 வயது பெண்ணும் 44 வயதான வியாபாரி ஒருவரும் படுகாயமடைந்தனர். இவ்விபத்தின்பின் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், இக்காரின் சாரதியான வியாங் லோட்னர், சேதமடைந்த அக்காரின் ஜன்னலுக்கு ஊடாக தலையை நீட்டியவாறு தனது செல்லிடத் தொலைபேசி மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தார்.
பின்னர் லோட்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
Average Rating