மதுபோதையில் கப்பலை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய மாலுமி…!!
மதுபோதையில் வாகனம் செலுத்தி வாகனத்தை விபத்துக்குள்ளாக்கிய சாரதிகள் பலரை அறிந்திருப்போம்.
ஆனால், மதுபோதையுடன் அதிவேக மாக கப்பலைச் செலுத்தி விபத்தை ஏற்படுத் திய கப்பல் மாலுமி குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பிரிட்டனின் ஸ்கொட்லாந்து பிராந்தியத்தில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றது.
423 அடி நீளமான இந்த பாரிய சரக்குக் கப்பல் கடந்த பெப்ரவரி மாதம் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலிருந்து நோர்வே நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஸ்கொட்லாந்தின் கிலிசோன் கரையோரத்தில் மோதி சேதமடைந்தது. 25 கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.
இக்கப்பல் விபத்துக்குள்ளான போது, ரஷ்யாவைச் சேர்ந்த 36 வயதான கப்பலின் கெப் டன், அதிகளவு மதுபானம் அருந்தியிருந்தமை அண்மையில் தெரியவந்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அளவை விட 8மடங்கு அதிகளவு அல்கஹோல் அவரின் உடலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கப்பல் தனது முழு வேகத்தில் பாறையுடன் மோதியதால் பலத்த சேதமடைந்திருந்தது.
Average Rating