சவர்க்காரத்தால் கழுவப்படக்கூடிய ஸ்மார்ட் போன்…!!
தண்ணீரால் கழுவி சுத்தமாக்கப்படக்கூடிய செல்லிடத் தொலைபேசியை ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ளது.
கியோசெரா எனும் நிறுவனம் தயாரித்த இத்தொலைபேசிக்கு “டிங்கோ ரப்ரே” (Digno rafre) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அழுக்காகிவிட்டால் கவலையடையத் தேவையில்லை. தண்ணீர், சவர்க்காரம் பயன்படுத்தி அத்தொலைபேசியை கழுவிக் கொள்ளலாம்.
ஆனால், சில வகையான தொலைபேசியை மாத்திரமே இதற்கு பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் ஊடுபுகாத (வோட்டர்புரூவ்) தொலைபேசிகள் ஏற்கெனவே சந்தையில் உள்ளபோதிலும் இந்த Digno rafr தொலைபேசி கழுவப்படக்கூடிய வகையில் நவீனமானதாக உள்ளது என ஜப்பானிய டெலிகொம் நிறுவனமான கே.டிடி.ஐ. தெரிவித்துள்ளது.
“நிலைப்புத்திறனை பரீட்சிப் பதற்காக இத்தொலைபேசியை 700 இற்கும் அதிகமான தடவைகள் எமது அபிவிருத்திக் குழுவினர் கழுவினர்” என அந்நிறுவனத் தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித் துள்ளார்.
Average Rating