பரமக்குடி அருகே என்ஜினீயரிங் மாணவி வீடு புகுந்து கடத்தல்…!!

Read Time:1 Minute, 20 Second

a930f3b9-e124-4dab-8a7f-7d27047d3986_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் வைகை நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

அந்த கல்லூரியில் பரமக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த பவித்ரன் என்பவரும் படித்து வந்தார். இவருக்கும் அர்ச்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி அர்ச்சனா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வீடு திரும்பிய போது அங்கு அர்ச்சனா இல்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்க வில்லை. இந்த சூழலில் மாணவர் பவித்ரன்தான், வீடு புகுந்து அர்ச்சனாவை கடத்திச் சென்றார் என தெரியவந்தது.

இதுகுறித்து எமனேசுவரம் போலீசில், அர்ச்சனாவின் தாய் தெய்வக்கனி புகார்செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் வேதவள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலசபாக்கம் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 2–ம் வகுப்பு மாணவன் சாவு…!!
Next post அரியானாவில் ரெயில்கள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் பலி…!!