அரியானாவில் ரெயில்கள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் பலி…!!
அரியானா மாநிலம் பல்வால் ரெயில் நிலையம் அருகே இன்று காலை லோக் மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் எதிர் திசையில் இருந்து புறநகர் மின்சார ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மின்சார ரெயிலும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் உள்ளூர் ரெயிலின் டிரைவர் சம்பவ இடத்தில் பலியானார். துணை டிரைவர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயிலின் கார்டு ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார ரெயிலில் இருந்த ஏராளமான பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகளும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறுபாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணையில் பனிமூட்டம் காரணமாக சிக்னல் விளக்கு எரிவதும் எதிரே ரெயில் வருவதும் தெரியாததால் விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Average Rating