நிலாவெளியில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளங்காண கால அவகாசம்..!!
திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காண்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் குறித்த சடலத்தை அடையாளப்படுத்தக்கூடிய யாராவது இருப்பின் நிலாவெளி பொலிஸாரை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலாவெளி கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மாலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது.
குறித்த சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து இந்திய பிரஜை ஒருவரின் அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், குறித்த சடலத்தின் ஆடைப் பையிலிருந்து இந்திய முத்திரை பொறிக்கப்பட்ட பாக்கு பக்கெற்றுகளும் கண்டெடுக்கப்பட்டன.
சடலத்தின் வலது கையில் மூன்று உருவங்கள் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலத்தின் வலது கையில் வளையங்களும் காணப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் தொடர்பான தகவல்கள் இந்திய துணை தூதரகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Average Rating