கொழும்பில் மழையால் ஒருவர் பலி 4; இளைஞரைக் காணவில்லை..!!

Read Time:2 Minute, 53 Second

timthumbசீரற்ற காலநிலை கார­ண­மாக கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடு­மை­யான மழை பெய்­து­வரும் நிலையில், கிராண்ட்பாஸ் பகு­தியில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கடும் மழை­யினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் மாதம்­பிட்­டி பகு­தியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்து பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அத்­துடன் கிராண்ட்பாஸ் கெத்­தா­ராம விளை­யாட்டு மைதானப் பகு­தியில் உள்ள மெல்­வத்த கால்­வாயில் அடித்துச் செல்­லப்­பட்டு 19 வய­தான இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று முன்தினம் பிற்­பகல் மூன்று மணி முதல் கொழும்பில் கடும் மழை பெய்­தது. இதன் போது மாதம்­பிட்­டி பகு­தியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்­துள்­ளது. இதன்­போது இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­குண்ட 57 வய­தான பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். எனினும் அனு­லா­வதி எனப்­படும் குறித்த பெண் வைத்­தி­ய­சா­லையில் வைத்து உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இத­னி­டையே கிராண்ட்பாஸ் கெத்­தா­ராம விளை­யாட்டு மைதா­னத்­துக்கு அருகில் மெல்­வத்த கால்­வாயில் விழுந்த பந்­தினை எடுக்க முயற்­சித்த 19 வய­தான இளைஞர் ஒரு­வரும் கால்வாயில் அடித்துச் செல்­லப்­பட்டு காணாமல் போயுள்ளார். சம்பவம் இடம்­பெறும் போது மழை­யுடன் கூடிய காலநிலை இருந்­துள்­ள­துடன் கால்­வாயின் நீர் மட்­டமும் அதி­க­ரித்து காணப்­பட்­டுள்­ளது.

மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் அபீல்ட் என்ற இளை­ஞரே இவ்­வாறு காணாமல் போயுள்­ள­தா­கவும் நேற்று மாலை 5.00 மணி­யாகும் போதும் அவர் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவரைத் தேடி பொலிஸ் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலாவெளியில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளங்காண கால அவகாசம்..!!
Next post சுவர் இடிந்து விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் பலி…!!