யாழில் ரயிலுடன் மோதிய ஆட்டோ – சாரதி பலி..!!
Read Time:57 Second
யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 அளவில் சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதி சமிஞ்ஞையை கவனிக்காது வாகனத்தை புகையிரதக் கடவையில் ஏற்றியபோது, எதிரே வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating