நேபாளத்தில் செங்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி…!!

Read Time:1 Minute, 33 Second

7f5c9197-3aa7-4cf7-9439-2a10774a3651_S_secvpfநேபாளத்தில் செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவரும் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 3 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த செங்கல் தொழிற்சாலையில் சுமார் 10 லட்சம் செங்கல்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.

தொழிற்சாலையின் மேலே உள்ள புகை போக்கி கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்ததாகவும், அதன் காரணமாகவே புகை வெளியேற முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேபாளத்தில் 850-க்கும் மேற்பட்ட செங்கல் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த தொழிற்சாலைகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் 8 கொலை குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்…!!
Next post சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இங்கிலாந்து வீரர்…!!