மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை – கள்ளத் தொடர்பால் விளைந்த வினை..!!
Read Time:1 Minute, 7 Second
திஸ்ஸமஹராம – பெரலிஹேல பிரதேசத்தில் நபரொருவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று விட்டு, தானும் விஷம் அருந்தியுள்ளார்.
பின்னர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்தில் 27 வயதான மனையும் 25 வயதான கணவருமே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை குறித்த பெண்ணின் தகாத உறவு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
திஸ்ஸமஹராம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating