வரதட்சணை கொடுமை: மனைவி புகாரில் கணவர் கைது…!!
Read Time:59 Second
பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் குலாம் முகமது (25). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சமீமா (21). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடம் ஆகிறது. 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு குலாம் முகமது சமீமாவிடம் தகராறு செய்து வந்தார்.
பின்னர் சமீமாவை அடித்து உதைத்து கொடுமைபடுத்த தொடங்கினார். இதனால் பயந்து போன சமீமா இது குறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் நசிமா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குலாம் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Average Rating