17 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகளை கைது செய்யாததால் உ.பி. கிராமத்தில் பதற்றம் நீடிப்பு..!!
உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் உள்ளது குருசிக்ரன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த இரு தினங்களுக்கு முன் 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொடூரமாக கொலை செய்துள்ளது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதுபற்றி அலிகர் கோட்ட டிஐஜி கூறுகையில், பணியில் அலட்சியத்துடன் இருந்ததாக காவல் நிலைய அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், அடையாளம் தெரியாத 4 குற்றவாளிகளைக் கைது செய்வற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Average Rating