ஆப்கானிஸ்தானில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்: 24 பயணிகள் பலி…!!
Read Time:1 Minute, 24 Second
வடக்கு ஆப்கானிஸ்தானில் இன்று பயணிகள் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர்.
காபூலில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று மசார் இ ஷரிப் நோக்கி வந்துகொண்டிருந்தது. சமங்கன் மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிரே வந்த லாரியுடன் அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிலைகுலைந்த பேருந்து, மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 24 பேர் பலியானதாகவும், 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் கவர்னர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஆபத்தான சாலைகள் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating