அவசரமாக கூடுகிறது தேசிய டெங்கு ஒழிப்பு செயலணி…!!
தேசிய டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியை அவசரமாக கூட்டுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக தெரிவித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியை, எதிர்வரும் ஜனவரி மாதம் அவசரமாக கூட்டுவது சம்பந்தமாக, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அண்மையில் மேல்மாகாணத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் மூலம், அறியப்பட்ட பிரச்சினைகள், மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறத்த மறு ஆய்வு கூட்டம் ஒன்று எதிர்வரும் செவ்வாயக்கிழமை இடம்பெற இருப்பதாக தெரிவிக்க்பப்டடுள்ளது.
Average Rating