தோழியின் முன்னே ஆண் நண்பரை தாக்கிய பொலிஸார்: வெளியாகிய காணொளி…!!
வீதியின் நடுவே தோழியின் கண் எதிரே பொலிஸார்இளைஞனொருவரை தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மஹாராஸ்திராவின் , தானே மாவட்ட த்தில் அமைந்துள்ள உல்லாஸ்நகர் ஹில்லைன் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வாலிபர் ஒருவரை வீதியில் வைத்து தாக்கும் இக்காணொளி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் தோழியுடன் நின்று கொண்டு இருக்கும் வாலிபரை அடித்து, உதைத்து இருவரையும் எச்சரிப்பது காட்டப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறி ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொது மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நட த்தியதாகவும் அதுவே தாக்குதலுக்கான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating