துபாயில் 63 மாடி கட்டடத்தில் பாரிய தீ…!!
Read Time:1 Minute, 8 Second
துபாயிலுள்ள 63 மாடிகளைக் கொண்ட 5 நட்சத்திர ஹோட்டல் கட்டடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
‘தி அட்ரஸ் டவுண்டவுன்’ எனும் ஹோட்டல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.30 மணியளவில் தீப்பற்றியது. 163 மாடிகளைககொண்ட உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா கட்டடத்துக்கு அருகில் மேற்படி தி அட்ரஸ் டவுண்டவுன் ஹோட்டல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தீயின் புகை புர்ஜ் கலீபா கட்டடத்தை நோக்கியும் பரவியது. எனினும் புர்ஜ் கலீபா கட்டடத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீயின் பெரு 90 சதவீதம் 2 மணித்தியாலங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating