பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!!

Read Time:4 Minute, 28 Second

timthumb (4)இலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவரும், பெரும்பான்மை இன யுவதியாகிய தமாரா குணசேகர என்பவர் தான் இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளை இங்கு எடுப்பித்துத் தருவதாக அதாவது ஐரோப்பிய நாடுகளுக்கு உங்கள் உறவுகளை அழைப்பித்துத் தருவதாக கூறி தற்போது பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றமை “அதிரடி” இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற ஆதாரபூர்வ தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து “அதிரடி”யில் விசேட நிருபர்கள், இதுகுறித்த தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கு முற்பட்டதன் விளைவாக இவருடைய உண்மையான பெயர் தமாரா குணசேகர எனவும் இவர் கொழும்பை அண்மித்துள்ள களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக அல்லது ஆட்களை அழைப்பித்துத் வருவதாகக் கூறி ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டு வருபவர் என்று தெரிய வந்துள்ளது.

இவர் சில மாதங்களுக்கு முன்னர், பதினைந்து லட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டு ஒருவரை இத்தாலிக்குக் கொண்டுவந்து விடுவதாக தெரிவித்து விட்டு அவ்வாறு கொண்டு வராமல் ஏமாற்றியதன் விளைவாக இவருடைய கடவுச்சீட்டு இலங்கையில் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளது. (இது தொடர்பான ஆதாரத்தினையும் நாம் இந்த செய்தியுடன் இணைத்துள்ளோம்.)

இச்சம்பவத்தையடுத்து இவர் இன்னுமொரு பெயரில் அதாவது லிஜினி குணசேகர என்னும் பெயரில் பிறிதொரு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு மேற்குறித்தது போன்று பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றதும் தெரிய வந்துள்ளது.

இவரது ஏமாற்று வேலையில் அகப்பட்டு இவரது மோசடியில் சிக்குகின்ற ஆண்கள், இவரைத் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுக்கும் போது இவர் தன்னுடைய பிரத்தியேக புகைப்படங்களை (நிர்வாணப் புகைப்படங்களை) அவர்களுக்கு அனுப்பி அவர்களைத் தனது வலைக்குள் விழவைத்து விட்டு பின்னர் அவர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறு மிரட்டி அவர்களிடம் தான் பெற்ற பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விடுகின்றார். இவ்வாறு அவர் ஏனையோர்க்கு அனுப்பியுள்ள அவரது பிரத்தியேக புகைப்பட ஆதாரங்களும் அதிரடி இணையத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவர் தற்போது பிரான்ஸ் தலைநகரான பரீஸ்-06ல் வசித்து வருகின்றார். இதேவேளை “அதிரடி” இணையத்திற்குக் கிடைக்கப் பெற்ற விசேட தகவல் ஒன்றின்படி பிரான்ஸிலுள்ள புலம்பெயர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும் இவருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் அந்த நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் தமாரா குணசேகர கொடுக்கல் வாங்கல் உள்ள சில தமிழ்மக்களை மிரட்டி வருகின்றமை தொடர்பாகவும் “அதிரடி” இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே, பிரான்ஸ் வாழ் தமிழ், சிங்கள மக்களே அவதானம், இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு “அதிரடி” இணையம் உங்களைக் கேட்டுக் கொள்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாயில் 63 மாடி கட்டடத்தில் பாரிய தீ…!!
Next post ஈராக்கில் வன்முறை நீடிப்பு: டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்…!!