ஆப்கானிஸ்தானில் தலிபான் சிறையில் அடைக்கப்பட்ட 59 கைதிகள் விடுப்பு…!!
Read Time:1 Minute, 9 Second
ஆப்கானிஸ்தானில் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணம் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. அங்கு அவர்கள் தனி அரசு நடத்தி வருகின்றன.
தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஹெல்மண்ட் மாகாணத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி ராணுவம் மீட்டு வருகிறது.
சமீபத்தில் ஹெல்மண்ட் பகுதியில் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் ராணுவம் அங்கு சிறையில் அடைத்து வைத்திருந்த 59 கைதிகளை விடுவித்தது.
இது ராணுவத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் சமரச பேச்சுவார்த்தையையும் மீறி தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்துவதாக தெரிகிறது.
Average Rating