30,000 ரூபா இலஞ்சம் பெறும்போது வசமாக சிக்கிய அதிகாரி…!!
நொச்சியாகம, ரனோராவ பிரதேச கமநல சேவை அதிகாரி இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்த வேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரனோராவ பிரதேச கமநல சேவை நிலையத்தில் வைத்து 30,000 ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சித்த வேளை சந்தேக நபரை கைது செய்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியன்த சந்திரசிறி தெரிவித்தார்.
பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றின் அணைக்கட்டை புனரமைத்து தருவதற்காக குத்தகை நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக பரிந்துரை செய்வதற்காக குறித்த அதிகாரி இலஞ்சம் கோரியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியன்த சந்திரசிறி தெரிவித்தார்.
Average Rating