யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமானது…!!
Read Time:1 Minute, 3 Second
யாழ். பல்கலைக்கழக வாயிலில் இருந்து பட்டம் பெறுபவர்கள் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் வேந்தர் பத்மாநன் ஆகியோர் மங்கள வாத்தியத்துடன் கைலாசபதி கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
யாழ்ப்பணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. பத்மநாதன் பட்டம் பெறும் மாணவர்களுக்கான பட்டத்தினையும் தங்க பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.
இப்பொதுப் பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை முதலாவது நாள் பட்டமளிப்பில் 4 அமர்வுகள் நடைபெற்றன.
ஏனயை மாணவர்களுக்கான பட்டங்கள் நாளை புதன்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளன .
Average Rating