பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு…!!

Read Time:2 Minute, 15 Second

hgபெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு – அம்பாறையில் சம்பவம்-

பெண் பொலிஸார் தங்கும் தங்­கு­மி­டத்­துக்குள் திருட்டுத்தன­மாக நுழைந்­த­தாகக் கூறப்­படும் அம்­பாறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் கான்ஸ்­டபிள் தொடர்பில் அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­லகம் ஊடாக விசேட விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் டி.ஆர்.எல்.ரண­வீ­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று முன் தினம் திங்­க­ளன்று மாலை 5.00 மணி­ய­ளவில் பெண் பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் மட்டும் தங்கும் அறைக்குள் நுழைந்­துள்­ள­தா­கவும் இதன் போது பெண் பொலிஸார் உரத்து சத்­த­மிட்­ட­வாறு பயந்து வெளியே ஓடி­வர, குறித்த பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரியும் விரைந்து வந்து என்ன நடந்­தது என விசா­ரித்­துள்ளார்.

இதன் போதே குறித்த காண்ஸ்­டபிள் அங்­கி­ருந்து தப்பி ஓடு­வதை அவர் அவ­தா­னித்­துள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

இந் நிலையில் அங்கு தங்­கி­யி­ருந்த பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு ஏதேனும் குற்றம் ஒன்றைப் புரியும் நோக்­குடன் அந்த கான்ஸ்­டபிள் உள்ளே சென்­றாரா என்­பது குறித்து கவனம் செலுத்­தப்­பட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போன் வெடித்து தம்பதி பலி ; மகன் கவலைக்கிடம் – தமிழகத்தில் சம்பவம்…!!
Next post பாலியல் உறவின் பின் கண­வரின் ஆணு­றுப்பை வெட்டி துண்­டித்த மனைவி…!!