பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு…!!
பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு – அம்பாறையில் சம்பவம்-
பெண் பொலிஸார் தங்கும் தங்குமிடத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்ததாகக் கூறப்படும் அம்பாறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஊடாக விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.ரணவீரவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் திங்களன்று மாலை 5.00 மணியளவில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மட்டும் தங்கும் அறைக்குள் நுழைந்துள்ளதாகவும் இதன் போது பெண் பொலிஸார் உரத்து சத்தமிட்டவாறு பயந்து வெளியே ஓடிவர, குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் விரைந்து வந்து என்ன நடந்தது என விசாரித்துள்ளார்.
இதன் போதே குறித்த காண்ஸ்டபிள் அங்கிருந்து தப்பி ஓடுவதை அவர் அவதானித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் அங்கு தங்கியிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏதேனும் குற்றம் ஒன்றைப் புரியும் நோக்குடன் அந்த கான்ஸ்டபிள் உள்ளே சென்றாரா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Average Rating