குளிரிலிருந்து உடலை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டடத்தை தீக்கிரையாக்கிய நபர் கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் குளிரிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வ தற்காக உடலை சூடேற்றிக் கொள்ளும் முயற்சியில் கட்டட மொன்றுக்கு தீமூட்டிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளர்.
நியூ ஓர்லின்ஸ் நகரைச் சேர்ந்த 25 வயதான டெனர் டேன்லி எனும் இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வீடற்ற நிலையில் வீதியில் வசிக்கும் யாசகர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் தனது உடலை வெப்பமூட்டிக் கொள்வதற்காக ஒன்றுக்கு தீ மூட்டினார் எனவும் அத்தீயானது அருகிலுள்ள கட்டடமொன்றுக்கும் பரவியது எனவும் தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளார்.
கட்டடத்துக்குப் பரவிய தீ சுமார் 2 மணித்தியாலங்கள் கவனிக்கப்படாமல் எரிந்தது என மேற்படி அதிகாரி கூறியுள்ளார்.
இதனால் அக்கட்டடத்தின் ஜன்னல்களும் உடைந்ததாகவும், பின்னர் அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றின் ஊழியர் இத்தீயைக் கண்டு தகவல் கொடுத்ததாகவும் மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டடமொன்றை தீக்கிரையாக்கியதாக டெனர் டேன்லி மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Average Rating