மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண் கைது..!!

Read Time:1 Minute, 20 Second

fggfgதலைநகர் புதுடெல்லியில், பலத்த பாதுகாப்பிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது பெண் ஒருவர் பூச்சாடியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பிரதமரின் பாதுகாப்புப் படை டெல்லி விஜய் சௌக் பாதை வழியாக கடந்து சென்ற போது நடைபெற்றது.

பூச்சாடியானது வாகனத்தின் மீது படாமல் சாலையில் விழுந்ததால் சேதம் எதுவுமில்லை.

முதற்கட்ட தகவலின் படி பிரதமர் செல்லும் பாதையை விட்டு விலக அந்த பெண்மணி மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் டெல்லி போலீசாரால் அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அந்த பெண்மணி அங்கிருந்து பாராளுமன்ற வீதிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த பெண்மணி எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உரிமை ஆணைக்குழுவும் எம்மை ஏமாற்றி விட்டது;பாதிக்கப்பட்டோர் கவலை..!!
Next post சரிதா நாயருடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் பட்டியல்: நாளை கோர்ட்டில் தாக்கல்..!!