நடுவீதியில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பெண்…!!
இந்தியாவின் பெங்களூருவில் தன்சானியா நாட்டு மாணவி நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூருவில் கடந்த ஞாயிறு இரவு கார் மோதி நடைபயிற்சி சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 2 கார்களுக்கு தீவைத்ததோடு, கார்களில் இருந்த வெளிநாட்டு நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரில் இருந்த தன்சானியா நாட்டு 21 வயது மாணவியை நிர்வாணப்படுத்தி, அடித்து உள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் மிகவும் வெட்கக்கரமானது என்று இந்திய மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் 5 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நடைபெற்ற போது, பொலிசாரும் அதனை பார்த்துக் கொண்டு இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கர்நாடகா கமிஷனர் தெரிவித்து உள்ளார்.
சம்பவம் நடைபெற்ற போது காரில் இருந்த ஆப்பிரிக்க மாணவர்களை வெளியே இழுத்து பொதுமக்கள் அடித்து உள்ளனர். காரில் இருந்த தன்சானியா நாட்டு மாணவி தப்பிஓடி பஸ்சில் ஏற முயன்று உள்ளார்.
ஆனால் பொதுமக்கள் அவரை தடுத்து உள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பின்னர் ஆட்டோவில் ஏறி தப்பிக்க மாணவி முயன்று உள்ளார், ஆனால் பொதுமக்கள் விடவில்லை.
அவருக்கு எங்களுடைய ஆடையை கொடுக்க சென்றோம். ஆனால் பொதுமக்கள் எங்களை கொடூரமாக தாக்கினர் என்று ஆப்பிரிக்க நாட்டு மாணவ அமைப்பு தெரிவித்து உள்ளது.
விபத்தை ஏற்படுத்தியவர் முதல் காரில் சென்ற சூடான் நாட்டை சேர்ந்தவர் ஆகும். பொதுமக்கள் அவரை அடித்தபோது, பின்னர் இரண்டாவது காரில் இருந்த மாணவியும், அவரது நண்பரும் உதவிசெய்வதற்காக சென்று உள்ளனர்.
அப்போது பொதுமக்கள் அவர்களையும் அடித்து விரட்டிஉள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சூட்டான் நாட்டை சேர்ந்தவருக்கும், தன்சானியா மாணவிக்கும் எந்தஒரு முன் அறிமுகமும் கிடையாது என்று ஆப்பிரிக்க மாணவ அமைப்பின் சட்ட ஆலோசகர் கூறிஉள்ளார்.
Average Rating