பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

Read Time:2 Minute, 19 Second

xvcபயங்­க­ர­வா­தி­களை இல்­லா­தொ­ழிக் கும் வரையில் சிரி­யாவில் விமான தாக்­கு­தல்­களை நிறுத்­தப்­போ­வ­தில்லை என ரஷ்யா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது.

சிரி­யாவில் அரச மற்றும் கிளர்ச்சி அமைப்­பி­னரிடையே நடந்­து­வ­ரு­கின்ற உள்­நாட்டு யுத்­தத்­தினை முடி­விற்கு கொண்டு வரு­வது தொடர்பில் சமா­தானப்பேச்­சு­வார்த்தை ஒன்று ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

இருந்­த­போ­திலும் சிரி­யாவில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் பதுங்கு குழி­களில் ரஷ்யா தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றமை அமைதிப்பேச்­சு­வார்த்­தைக்குத் தடை­யாக உள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் இது தொடர்பில் ரஷ்யா மேற்­கொண்டு வரு­கின்ற வான் தாக்­கு­தல்­களை நிறுத்த வேண்டும் என அமெ­ரிக்க இரா­ஜாங்க அமைச்சர் ஜோன் கெரி அறி­வு­றுத்­தி­யி­ருந்தார்.

அவ­ரது அறி­வு­றுத்­த­லுக்கு நேற்­றைய தினம் பதி­ல­ளித்த ரஷ்யா, பயங்­க­ர­வா­தி­களை ஒழிக்கும் வரையில் சிரி­யாவில் எமது தாக்­கு­தல்­களை நிறுத்­தப்­போ­வ­தில்லை என உறு­தி­யாகத் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு செவ்­வி­ய­ளித்த ரஷ்­யாவின் வெளி­யு­றவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ராவ், மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற விமானத் தாக்­கு­தல்­களை நாங்கள் நிறுத்­தப்­போ­வ­தில்லை.

அல்கைதாவின் கிளை அமைப்­பான, ஜபாத் அல் -­ நுஸ்ரா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை வெற்றி கொள்ளும் வரையில் சிரியாவில் எங்கள் வான்வழி தாக்குதல்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் தெரியுமா…!!
Next post இந்தோனேசியாவில் பூகம்பம்…!!