பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்…!!
பயங்கரவாதிகளை இல்லாதொழிக் கும் வரையில் சிரியாவில் விமான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சிரியாவில் அரச மற்றும் கிளர்ச்சி அமைப்பினரிடையே நடந்துவருகின்ற உள்நாட்டு யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பில் சமாதானப்பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
இருந்தபோதிலும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளில் ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை அமைதிப்பேச்சுவார்த்தைக்குத் தடையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இது தொடர்பில் ரஷ்யா மேற்கொண்டு வருகின்ற வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி அறிவுறுத்தியிருந்தார்.
அவரது அறிவுறுத்தலுக்கு நேற்றைய தினம் பதிலளித்த ரஷ்யா, பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரையில் சிரியாவில் எமது தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு செவ்வியளித்த ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ராவ், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விமானத் தாக்குதல்களை நாங்கள் நிறுத்தப்போவதில்லை.
அல்கைதாவின் கிளை அமைப்பான, ஜபாத் அல் - நுஸ்ரா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை வெற்றி கொள்ளும் வரையில் சிரியாவில் எங்கள் வான்வழி தாக்குதல்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
Average Rating