குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – 9 மாதங்களேயான குழந்தை பலி…!!
Read Time:59 Second
வென்னப்புவ – பொரலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து பிரதேச மக்கள் இருவரையும் மீட்டு லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த போது, 9 மாதங்களேயான குறித்த பெண் குழந்தை பலியாகியுள்ளது.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை குறித்த தாய் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating