ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை..!!
இரு இளைஞர்களுக்கு, 8 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறுவர்களாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவனிடமிருந்து ஐஸ்கிறீம் ஒன்றையும் சூரியகாந்தி விதைகளையும் களவாடிய குற்றச்சாட் டில் தலா 13 வருட சிறைத் தண் டனை விதிக்கப்பட்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி களவு தொடர்பில் பாதிக் கப்பட்ட சிறுவன் முறைப்பாடு செய்யாத நிலையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லொல்கன் குத்லு (தற்போது 22 வயது) மற்றும் ஒகன் சிப்ட்சி (தற்போது 23 வயது) ஆகியோரே மேற்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான இருவருமாவர்.
குறிப்பிட்ட திருட்டு சம்பவத்தையடுத்து இடம்பெற்ற பல வருடகால விசாரணைகளுக்கு மத்தியில் அவர்கள் இருவரும் தமது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்தனர். இந்நிலையில் குத்லு உயர் கல்விக்காக பல்கலைக்கழக பரீட்சையொன்றுக்கு ஆஜராக சென்ற வேளைஅங்கு வந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள் ளார். பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற குத்லு தனக்கான தண்டனையை பிற்போட கோரியிருந்ததை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்ததையடுத்தே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த மாணவர்களது பெற்றோரும் சக மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் பெரும் அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மகனை எவ்வாறாயினும் பட்டதாரியாக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வந்த குத்லுவின் தாயாரான ஹவ்வா சக்லம் இந்தக் கைதால் பெரிதும் மனம் உடைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவரின்றி தனித்து வாழும் அவர் தனது மருத்துவத்தாதி தொழில் மூலம் கிடைத்த பணத்திலேயே தனது மகனின் கல்விச் செலவை சமாளித்து வந்துள்ளார்.
தண்டனை என்பது மீளவும் குறிப்பிட்ட குற்றச்செயலை மேற்கொள்ளாது தடுப்பதற்காக வழங்கும் ஒன்றெனவும் இந்நிலையில் விபரம் அறியாப் பருவத்தில் செய்த அற்ப குற்றச்செயல் ஒன்றுக்காக இத்தனை வருடங்கள் கழித்து நீண்ட சிறைத் தண்டனையை வழங் கியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
Average Rating