கோவை செட்டிப்பாளையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உடல்கருகினர்..!!
Read Time:1 Minute, 6 Second
கோவை செட்டிப்பாளையம் ஓராட்டு குப்பை என்ற பகுதியில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று மதியம் தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பாய்லர் வெடித்தது.
இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பிரிஜிம், சரோஜ், தருண், பிரானாஸ், பிரித்தம், குணால் ஆகிய 6 பேர் உடல் கருகினர். இதுப்பற்றி தெரியவந்ததும் செட்டிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Average Rating