மாரப்பனையில் மீட்கப்பட்ட 2 சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் நடைபெற்றன..!!
Read Time:53 Second
இரத்தினபுரி – மாரப்பனை, கல்இன்ன பிரதேசத்தில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோனைகள் இன்று நடைபெற்றன.
கல்இன்ன பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் கொழுந்து சேகரிக்கும் மண்டபத்தில் இருந்து 14 வயதான மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த மாணவனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவரின் சடலம் அங்கிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டது.
மாணவனை துஷ்பிரயோகம் செய்த பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating