கண்டியில் 3 பிள்ளைகளின் தாய் உயிருடன் எரித்துக் கொலை…!!
Read Time:1 Minute, 6 Second
கண்டி, தெல்தெனியவில் மூன்று பிள்ளைகளுடன் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இன்று எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தெல்தெனிய, திகண பிரதேசத்தின் கும்புக்கந்துறை என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில் இப்பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அயலவர்கள் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் போது இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating