ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆசிரியர் கொன்று புதைப்பு: கள்ளக்காதலி உள்பட 3 பேர் சிக்கினர்..!!

Read Time:2 Minute, 27 Second

timthumb (1)கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(36). இவர் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ராமச்சந்திரபட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, மனைவி அனுஷா(30), 2 குழந்தைகளுடன் வசித்தார்.

கடந்த 6ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி பாவூர்சத்திரம் போலீசார் சந்தோஷின் செல்போனை ஆய்வு செய்தனர். கடைசியாக அவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த முருகன் மனைவி பொன்செல்வியிடம்(38) பேசியது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில், ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டியதால் தந்தை தங்கபாண்டி, தம்பி முருகனுடன் சேர்ந்து சந்தோஷை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது,

பொன்செல்வியின் கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். பொன்செல்விக்கு சந்தோசுடன் தொடர்பு ஏற்பட்டது. அவருக்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பதை அறிந்த சந்தோஷ் கண்டித்துள்ளார்.

இதில் தகராறு ஏற்படவே செல்போனில் எடுத்த ஆபாச படங்களை கணவருக்கு அனுப்பி விடுவதாக சந்தோஷ் மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 6ம் தேதி சந்தோஷை தனது வீட்டுக்கு வரவழைத்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

இதில் அவர் இறந்ததும் தந்தை, தம்பியுடன் சேர்ந்து செப்டிக்டேங் அருகே ஏற்கனவே தோண்டியிருந்த குழியில் போட்டு புதைத்து உள்ளார் என தெரிவித்தனர். 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவுநீர் கால்வாயில் பிஞ்சு குழந்தையின் உடல்: விசாரணையை முடுக்கி விட்ட பொலிஸ்..!!
Next post தமிழ் சினிமாவில் இது சாத்தியமா..!!