அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் பெண் தரகர், நண்பருடன் கைது..!!

Read Time:2 Minute, 0 Second

cvbvசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசார விடுதி நடத்திய பெண் தரகர், அவரது தோழருடன் கைது செய்யப்பட்டார்.

அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை
சென்னை காவாங்கரை அருகே உள்ள கதிர்வேடு ஜெய்மாருதி நகரில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் சோதனை நடத்தும்படி, விபசார தடுப்பு போலீசாருக்கு, கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், விபசார தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்நாராயணன் தலைமையில் தனிப்படை போலீசார் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

பெண் தரகர் கைது
சோதனையில் அங்குள்ள வீடு ஒன்றில் இளம்பெண் ஒருவரை அடைத்து வைத்து விபசார தொழில் நடத்துவது கண்டறியப்பட்டது. அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

அங்கு விபசார விடுதி நடத்திய தரகர் தேவி (வயது 33), அவரது நண்பர் ஹரிபாபு (34) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நீண்டகாலம் விபசார தொழில் செய்து வந்தாலும், முதல் முறையாக தற்போதுதான் போலீஸ் வழக்கில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள்..!!
Next post ரெயில் தண்டவாளத்தில் துண்டு, துண்டாக கிடந்த ஆண் பிணம் போலீஸ் விசாரணை..!!