கணவர் 2 ஆவது திருமணம் செய்திருப்பதை பேஸ்புக் மூலம் அறிந்த மனைவி..!!
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் இரகசியமாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்திருப்பதை பேஸ்புக் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
52 வயதான அன்ட்ரூ மெக்லியொட் பெய்கி என்பவர் ஏற்கெனவே திருமணமாகியிருந்த நபர். இவரின் மனைவி சுசான் (51).
அண்மையில் 48 வயதான ஹெலன் எனும் மற்றொரு பெண்ணை அண்ட்ரூ அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இவ்விடயம் அன்ட்ரூவின் முதல் மனைவி சுசானுக்குத் தெரியாது.
ஆனால், அன்ட்ரூ தனது புது மனைவியுடன் தான் காணப்படும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றினார்.
இதன் மூலம், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருப்பதை அறிந்த சுசான், இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் 4 வருடங்களுக்கு முன்னரே இணையத்தளம் மூலம் சுசானை விவகாரத்து செய்துவிட்டதாக பொலிஸாரிடம் அன்ட்ரூ கூறினார்.
எனினும் அவ்வேளையில் அவர் உத்தியோகபூர்வமாக விவாகரத்து செய்திருக்கவில்லை என சுசான் கூறினார்.
இதையடுத்து அன்ட்ரூவை பொலிஸார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது
Average Rating