குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் கீழே விழுந்து பலி..!!
Read Time:1 Minute, 15 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் தவறி கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி (55) என்பவர் நேற்று மாலை வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் காயவைத்துள்ள துணிகளை எடுத்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று குரங்குகள் அவரைப் பார்த்து கொரூரமாக முறைத்தபடி தாக்க வந்தன.
அவற்றிடம் இருந்து தப்பிப்பதற்காக லீலாவதி வேகமாக ஓடினார். ஓரிடத்தில் நிலைதவறி மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Average Rating