மகளின் திருமணத்துக்காக அமெரிக்கா சென்ற இந்தியர் மாயம்…!!
ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரை சேர்ந்தவர் பிரசாத் மோபார்டி(55). தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு கடந்த ஜனவரி மாதம் சென்றார்.
கடந்த சனிக்கிழமை நடந்த மகள் துர்காவின் திருமணவிழாவின்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்த பிரசாத் அன்று மாலை சுமார் 4 மணியளவில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். ஆனால், பின்னிரவுவரை அவர் வீடு திரும்பாததை அறிந்த மணமகள் துர்கா(28), இதுதொடர்பாக, போலீசில் புகார் அளித்தார்.
மோப்பநாய் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் போலீசார் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
ஏற்கனவே, மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரசாத், வேண்டுமென்றே அமெரிக்காவில் எங்காவது தலைமறைவாக சுற்றிக் கொண்டிருக்கலாம் என கருதும் போலீசார், அருகாமையில் உள்ள நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அவரைப் பற்றிய தகவல்களை பரிமாறி, தேடி வருகின்றனர்.
Average Rating