இளைஞரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம மனிதன்..!!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை தாக்கிவிட்டு வழிப்பறி செய்துவிட்டு தப்பிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
சூரிச் மாகாணத்தில் உள்ள wohlen பகுதியில் இளைஞர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாய் அப்பகுதி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், அந்த இளைஞரை மீட்டு நடந்தவற்றை விசாரித்துள்ளனர்.
இரவு நண்பர்களுடன் இருந்துவிட்டு குடியிருப்பு திரும்பும்போது மர்ம மனிதர் குறிக்கிட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிவித்த அந்த 19 வயது இளைஞன்,
தமது கைவசம் இருந்த பணம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் வழிப்பறி செய்துவிட்டு தப்பிய அந்த மனிதர்,
தம்மை கொடூரமாக தாக்கியதாகவும், அதனால் தாம் சுய நினைவை இழந்துள்ளதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞருக்கு முதலுதவி வழங்கி அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு இட்டுச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாகாண பொலிசார் முடிவு செய்துள்ளதை அடுத்து கூடுதல் தகவல்களை திரட்ட பாதிக்கப்பட்ட நபரை விசாரித்துள்ளனர்.
Average Rating