காத்தான்குடியில் உணவு விஷமானதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!!
காத்தான்குடியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக 65 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 15 பேர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் குறிப்பிட்டுள்ளார்.
22 சிறுவர்களும், 25 பெண்களும் 23 ஆண்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு விசமடைந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்னொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கூறியுள்ளார்.
காத்தான்குடியிலுளள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (19) பெற்றுக் கொண்ட உணவை உட்கொண்டதன் பின்னரே இவர்களுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வயிற்றோட்டம், தலைவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற குணங்குறிகளுடன் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் தெரிவித்துள்ளார்.
Average Rating