மிச்சிகன் மாகாண துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி: சந்தேக நபர் கைது…!!
Read Time:1 Minute, 24 Second
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பலியானர்கள்
மிச்சிகன் மாகாணத்தில் சனிக்கிழமை மாலை கலாமாசூ என்ற அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள் நிறைந்த பகுதியில், அடையாளம் தெரியாத நபர் காரில் சென்றப்படி அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீது தூப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் மொத்தமாக 7 பேர் உயிரிழந்தார்கள். தூப்பாகி குண்டு காயங்களுடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூப்பாக்கி சூடு நடத்திய நபர் குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து சுடாமல், கண்ணில் பட்டவர்களையேல்லாம் சுட்டதாக சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Average Rating