அமெரிக்காவில் ஆந்திர மாணவர்களை வயரால் கட்டிப்போட்டு சுட்டுக் கொன்றனர்; கொலையாளிகள் பற்றி புதிய தகவல்

Read Time:2 Minute, 30 Second

அமெரிக்காவில்லூசி யானா பல்கலைக்கழ கத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர் சந்திரசேகர ரெட்டி கொம்மா (31), இவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது நண்பர் கிரன் குமார் ஆலம் (33) இவர் வேதியியல் துறையில் பி.எச்.டி படித்து வந்தார். ஐதராபாத்தை சேர்ந்தவர். பல்கலைக்கழக வளாகத் துக்குள்ளேயே ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி யிருந்தனர். கிரன்குமாரின் மனைவி கல்பனா தனது கணவரும், சந்திரசேகரரெட்டி கொம்மாவும் ஒரு அறையில் குண்டு பாய்ந்து ரத்த வெள் ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அவசர தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்த போது சந்திரசேகர ரெட்டி, கிரன்குமார் இருவரும் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சந்திரசேகர ரெட்டியின் கைகள் கம்ப்ïட்டர் வயரால் கட்டப்பட்டு இருந்தது. அவரை கட்டிப் போட்டு விட்டு கொலையாளிகள் சுட்டது தெரிய வந்துள்ளது. கிரன்குமார் உடல் வாசல் கதவு அருகே கிடந்தது. இருவரையும் சுட்டுக் கொன்றவர்கள் 3 கறுப்பு இன வாலிபர்கள். அவசர அவசரமாக ஒரு காரில் ஏறி தப்பி ஓடியதாக நேரில் பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் தெரிவித்துள்ள னர். காரின் முன் விளக்கை அணைத்து விட்டு அதை வேகமாக கொலையாளிகள் ஒட்டிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கும் நோக் கத்தில் அந்த 3 பேரும் இந்திய மாணவர்களின் அறைக்குள் புகுந்திருக்க வேண்டும் என்றும் கொள் ளையை தடுத்த போது அவர்களை சுட்டுக் கொன்று இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். கொல்லப்பட்ட கிரன்குமார் ஆலம் தந்தை ராஜையா ஆந்திராவில் பிரபல தெலுங்கு எழுத்தாளர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 2-வது மனைவியுடன் தகராறு; 4 வயது மகனை கடத்தி கொன்ற போலீஸ்காரர்
Next post ஆசிரியைக்கு “செக்ஸ்” தொல்லை கொடுத்தவர் கைது