சாலையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்: கண்டுகொள்ளாமல் சென்ற மக்கள்…!!
சீனாவில் பெண் ஒருவர் சாலையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போது பொதுமக்கள் வேடிக்கைபார்த்து சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஃபுயுஜியன் மாகாணத்தில் உள்ள Fuzhou நகரின் சாலையில் கடந்த 23ஆம் திகதி பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது சாலையின் ஓரமாக நடந்து வந்த நபர் ஒருவர் அப்பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து பாலியல் ரீதியான தொல்லைகள் அளித்துள்ளார்.
சம்பவத்தின் போது பலர் சாலையில் வாகனங்களிலும் நடந்தும் சென்றுள்ளனர்.
எனினும், இச்செயலை கண்டும் காணாததுபோல் சென்றுவிட்டனர். இறுதியாக நான்கு நபர்கள் சாலையில் இச்செயலை பார்த்தப்படி சென்றுள்ளனர்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் காப்பாற்றும்படி அவர்களை நோக்கி கேட்டுள்ளார். அவர்கள் நின்றதையடுத்து மர்ம நபர் அப்பெண்ணை விடுவித்துள்ளார்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண் வேகமாக சென்றுவிட்டார். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.
மேலும் தனது நீதி வேண்டும் எனக் கூறி அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளை இணையத்திலும் பதிவேற்றியுள்ளார்.
Average Rating