கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு…!!

Read Time:2 Minute, 7 Second

ghகண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு : 47,42 450 ரூபா பெறுமதியான பொருட்கள் சிக்கின – மூவர் கைது-

கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கண்டி குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் திருடப்பட்ட பொருட்களை கைப்பற்றியதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ததுள்ளனர். அத்துடன் லொறி ஒன்றிணையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதம் 14ஆம் திகதி இரவு கண்டி மாநகரில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்று இரவு நேரம் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான தைத்த ஆடைகள் சாரிகள் உட்பட புடவை வகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டையடுத்து கண்டி பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இயங்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி வீரசிங்க சந்திரசேகர-உதவி இன்ஸ் பெக்டர்களான தம்மிக்க- கோமசிங்க பொலிஸ் சார்ஜன்ட்களா தர்மரத்ன பண்டார ஆரிய ரத்னபண்டார, சூரகோன்-தர்மரத்ன நந்தலால் ஆகியோர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதனையடுத்து ஹட்டன் குயில் வத்தையைச் சேர்ந்த மூவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 47,42 450 ரூபா பெறுமதியான புடவைகளை வீடுகளிலிருந்தும் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போனோர் குறித்து யாழில் 206 புதிய முறைப்பாடுகள்..!!
Next post பாகிஸ்தானில் வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்ற தந்தை…!!