நாடு பூராகவும் 1500 தெருவோரக் குழந்தைகள்…!!
Read Time:1 Minute, 19 Second
இலங்கையில் தெருவோரக் குழந்தைகள் 1500 உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.
குறித்த சிறுவர்கள் பலவிதமான வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்க கூடும் என காவற்துறையினரால் நம்பபடுகிறது.
பெற்றோர்களின் தவறான செயற்பாடுகளின் காரணமாக ஆதரவற்ற குழந்தைகள், வீதிகளில் நடமாடுவதால் பலவித கொடுமைக்கு உள்ளாகுகின்றனர்.
யாசக குடும்பங்களில் உள்ள பல குழந்தைகள் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சில பிள்ளைகள், விபச்சார வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
எனினும் இந்த வன்கொடுமை தொடர்பாக எந்த ஒரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் காவற்துறைக்கு கிடைக்காமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த தெருவோரக் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக உரிய பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
Average Rating