ஆஸ்திரேலியாவில் இனவெறி தலைப்பாகை அணிந்த சீக்கிய சிறுவனுக்கு கத்திக்குத்து…!!
Read Time:1 Minute, 19 Second
ஆஸ்திரேலியாவில் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிறுவன் கத்தியால் குத்தப்பட்டான்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 13 வயது சீக்கிய சிறுவன் ஹர்ஜீத் சிங். வெளியே சென்றிருந்த இவன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடன் பஸ்சில் பயணம் செய்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அவன் அணிந்திருந்த தலைப்பாகையை பார்த்து கேலி கிண்டல் செய்தனர்.
இதை தட்டிக்கேட்ட சிறுவன் ஹர்ஜீத் சிங்கை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினர். மேலும் அவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சீக்கிய சிறுவன் மீது இனவெறி தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலியாவில் சீக்கியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating